கால்நடை ஒட்டுண்ணியியல் துறை 2023 ஆம் ஆண்டில் குடற்புழுவியல் ஆய்வகம் மற்றும் பூச்சியியல் மற்றும் ஒருசெல் ஒட்டுண்ணியியல் ஆய்வகம் என இரண்டு ஆய்வகங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. இத்துறையானது கால்நடை மற்றும் கோழி நோய்களைக் கண்டறிவதற்கும், கால்நடை ஒட்டுண்ணி மருத்துவத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளன. இத்துறைக்கு ரூ. 89,64,400/- மதிப்பீட்டில் இளங்கலை மாணவர்களுக்கு கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் நோக்கத்திற்காக கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. கால்நடை கல்விக்கான குறைந்தபட்ச தரநிலைகள் 2016 இன் படி இளங்கலை மாணவர்களுக்கு கால்நடை ஒட்டுண்ணி மருத்துவம் குறித்த தரமான கல்வியை வழங்குவதில் துறை கவனம் செலுத்துகிறது. மேலும் இந்தக் கல்லூரியின் தொடர்புடைய பிற துறைகள், அரசு கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பாளர்களுக்கு நோய் கண்டறியும் சேவைகளை வழங்குகிறது. மேலும், நோய் கண்டறிதலுக்காக நோய் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நலனுக்காக பொருத்தமான ஒட்டுண்ணி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அறிவுறுத்தப்படுகின்றன.
கால்நடை ஒட்டுண்ணியியல் (3 + 2) என்ற பாடம் இளங்களைப் பட்டப் படிப்பின் மூன்றாம் தொழில்முறை ஆண்டில் வழங்கப்படுகிறது.
பெயர் மற்றும் பதவி | மின்னஞ்சல் | தொலைப்பேசி எண் |
---|---|---|
முனைவர். க. அருணாசலம், பேராசிரியர் மற்றும் தலைவர் | mvijayabharathi74@gmail.com | +91-94439 43483 |
முனைவர். தா.வே. தமிழம்உதவி பேராசிரியர் | drtamizham@gmail.com, | +91-97892 97481 |
பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டு ரோடு, நத்தகரை டோல் பிளாசா, சேலம்-636 112, தமிழ் நாடு, இந்தியா. தொலைபேசி எண்: +91-4282-290998 மின்னஞ்சல்: vpa-vcri-slm@tanuvas.org.in