DCAPS

கால்நடை உற்பத்திக் கல்வி மையம்

புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்


வரலாறு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2017 ஆம் ஆண்டு புலிக்குளம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் "தமிழ்நாட்டின் பூர்வீக கால்நடை இனங்களை பாதுகாப்பதற்கான மரபணு வள மையம் - புலிக்குளம்" என்ற NADP திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இந்த நிலையத்தின் மொத்த நிலப்பரப்பு 44 ஏக்கர் மற்றும் இந்த ஆராய்ச்சி நிலையம் 39 புலிக்குளம் மாடுகளையும் 5 புலிக்குளம் காளைகளையும் பராமரித்து வருகிறது. கால்நடைகளின் பசுந்தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக CO5, COFS 29, Desmanthus, அகத்தி மற்றும் சுபாபுல் போன்ற தீவனப் பயிர்கள் 7 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படுகின்றன.

நோக்கங்கள்

  • பூர்வீக புலிகுளம் இன மாடுகளின் கரு பாதுகாத்தல் .
  • புலிகுளம் இன மாடுகளின் பெருக்கம்.
  • நிறுவனத்திலும் கிராமங்களிலும் புலிக்குளம் கால்நடைகளைப் பாதுகாத்தல்.

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம்,
மாங்குளம், மானாமதுரை- 630 606, சிவகங்கை மாவட்டம்
மின்னஞ்சல்: pcrs@tanuvas.org.in