mvc

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை


  • கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறையானது இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் பாடங்களை கற்பிக்கும் நோக்கத்துடன் ஏப்ரல் மாதம் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • கால்நடைகளுக்கான இனவழி மூலிகை மருத்துவ முறைகள் பற்றிய முதுநிலை கால்நடை மருத்துவப்பட்டயப் படிப்பானது அக்டோபர் 2018 முதல் இத்துறையில் செயல்பட்டு வருகிறது.
  • கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் பாடத்தில் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பானது அக்டோபர் 2019ல் இத்துறையில் தொடங்கப்பட்டது.
  • தமிழ்நாடு அரசின் புதுமை நிதித்திட்டத்தின் கீழ் ’இனவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்தல்’ ஆராய்ச்சிதிட்டமானது ரூ.1372.95 லட்சங்கள் நிதி உதவியுடன் 2017 முதல் இத்துறையில் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக திட்டத்தின் இனவழி கால்நடை முதலுதவி மூலிகை மருத்துவ ஆராய்ச்சித்திட்டமானது 2017 முதல் இத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிரது.

குறிக்கோள்:

  • இளநிலை, முதுநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இன வழி மூலிகை மருத்துவ முறைகள் பற்றிய பட்டயப்படிப்பு மாணாக்கர்களுக்கு கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் பாடங்களை கற்பித்தல்.
  • அலோபதி மற்றும் மூலிகை மருந்துகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளில் தேவை அடிப்படையிலான மருந்தியல் மற்றும் நச்சுயியல் ஆராய்ச்சியை மேற்கொள்தல்
  • கால்நடை வளர்ப்போர்க்குத் தேவையான மருந்து மற்றும் அதன் பயன்பாட்டுத் தகவல் சேவைகளை வழங்குதல்

சேவைகள்:

  • இனவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தமிழக கால்நடைப் பண்னையாளர்கள் பயனுக்காக 2017 முதல் இத்துறையில் செயல் பட்டுவருகிறது.
  • கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பிரச்சார வாகனம் மூலமாக நடமாடும் மூலிகை மாதிரிப் பூங்கா வழி தமிழகமுள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவ முறைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

சாதனைகள்/ காப்புரிமைகள்/ தொழில்நுட்ப பரிமாற்றங்கள்:

  • இனவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தமிழக கால்நடைப் பண்னையாளர்கள் பயனுக்காக ஆகஸ்ட் 2017 முதல் இத்துறையில் செயல் பட்டுவருகிறது.
  • கால்நடைகளில் ஏற்படும் மடிநோய்க்கு மேல்பூச்சு மருந்தாக பயன்படும் மூலிகைத் தாது மீநுண் எமுல் ஜெல் மருந்து உருவாக்கப்பட்டது.
  • இனவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்தல் திட்டத்தின் கீழ், கருப்பை அழற்சி மாத்திரை, கல்லீரல் ஊக்கி, இனவிருத்திப்பொடி முதலிய மூலிகைத் தயாரிப்பு பொருட்கள் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
  • பல்கலைக்கழகத்தின் நான்கு வெவ்வேறு வளாகங்களில் (18 ஏக்கர்;) கால்நடைகளுக்கான மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
  • பசுக்களில் மடிநோய் பற்றிய ஆராய்ச்சியில் மூலிகை தெளிப்பான் உருவாக்கப்பட்டு மதிப்பிடப்பட்டுள்ளது.

வல்லுநர்கள்

  • முனைவர் வ. ரங்கநாதன், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • முனைவர் மு.ஜெ. இராஜா, இணைப்பேராசிரியர்
  • மருத்துவர் அ. இளமாறன் உதவிப்பேராசிரியர்
  • மருத்துவர்க.விஜயகரன், உதவிப்பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை,

கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

ஒரத்தநாடு – 614625, தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 04372 - 234012

மின்னஞ்சல்: vptvcrond@tanuvas.org.in