vcri

விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி


தோற்றம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (தானுவாஸ்) கீழ் கடந்த 1996 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்படும் வேளாண் அறிவியல் நிலையம் - குன்றக்குடி, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் மாவட்டத்தின் மொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த வேளாண் அறிவியல் நிலையத்திற்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் 17.35 ஹெக்டர் பரப்பளவை அரக்கட்டளை மூலம் 99 வருட குத்தகைக்கு வழங்கியள்ளார். இந்த வேளாண் அறிவியல் நிலையமானது விவசாயம் மற்றம் விவசாயம் சார்ந்த துறைகளில் விவசாயிகளுக்கு அடிப்படை பயிற்சிகள் முதல் அலுவலர்களுக்கான மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் வரை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த முன்னோடி மையம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள்; மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மண்ணியல், மீன்வளம், மனையியல் போன்ற பல்வேறு துறைகளில் பயிற்சி அளித்து அவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகின்றது.


குறிக்கோள்கள்

வேளாண் அறிவியல் நிலையங்கள் தங்கள் பகுதிகளுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை வயல்வெளி பரிசோதனைகள், செயல்விளக்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துதல், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களுக்கு தகவல்; வள மையமாக செயல்படுதல் போன்ற குறிக்கோள்களை செயல்படுத்த கீழ்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

  • வயல் வெளிப் பரிசோதனை மூலம் பண்ணைக்கேற்ற வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்நுட்பங்களைத் தேர்ந்தெடுத்தல்.
  • முதல்நிலை செயல்விளக்கம் மூலம் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் உற்பத்தி திறனை மேம்படுத்த விவசாயிகளின் வயல்களில் மாதிரி விளக்கத்திடல்கள் அமைத்தல்.
  • விவசாயிகளுக்கு வயல்வெளிப் பரிசோதனை மற்றும் முதல்நிலை செயல்விளக்கத்தின் போது அவர்களுக்கு தேவையான பயிற்சியளித்தல் மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சியளித்தல்.
  • சரியான விரிவாக்க முறையைக் கையாண்டு, ஆராய்ச்சி நிலையங்களிருந்து பெறப்பட்ட புதிய தொழிநுட்பங்களைப் பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • விவசாயிகளுக்குத் தரமான விதை, நாற்றுகள், கன்றுகள், கால்நடை மற்றும் அதனைச் சார்ந்த இடுபொருட்களைத் திட்டங்கள் மூலம் அளித்தல்.
  • வேளாண் அறிவியல் நிலையமானது மாவட்ட அளவில் வேளாண் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஏற்றபடி வேளாண் தொழில்நுட்ப தகவல் மையமாக செயல்படுதல்; ஆகியவை முக்கிய குறிக்கோள்களாகும்.

மேற்கண்ட முக்கிய குறிக்கோள்களை அடைய வேளாண்மை மற்றும் அதனைச் சார்;ந்த துறைகளான, கால்நடை, தோட்டக்கலை, உழவியல், மண்ணியல், மீன்வளம்,வேளாண் பொறியியல் மற்றும் மனையியல் போன்ற துறைகளின் மூலம் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றது. மேலும் முதல்நிலை செயல்விளக்கம் மற்றும் வயல்வெளிப் பரிசோதனை மூலம் விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களின் அனுகூலத்தைக் கண்டு நம்பிக்கை பெறுகின்றனர்.

வயல்வெளி ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் வேளாண் பிரச்சினைகளை ஆய்வு செய்து தக்க தீர்வுகளை தருகின்றனர். இதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கி கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் சேவைகள்

வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை,மண்ணியல், மீன்வளம், மனையியல் போன்ற பல்வேறு துறைகளில் விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண் அறிவியல் நிலைய வளாகத்திலும் மற்றம் வளாகத்திற்கு வெளியேயும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

  • விரிவாக்க அலுவலர்களுக்கான நவீன தொழில்நுட்ப பயிற்சி அளித்தல்
  • முதல்நிலை செயல் விளக்கம் மற்றும் வயல்வெளி சோதனைகள் நடத்துதல். மாவட்டத்திற்கேற்ற புதிய தொழில்நுட்பங்களை முதல்நிலை செயல்விளக்கம் மூலம் பரவலாக்குதல்.
  • விவசாயிகளின் வயல்களிலிருந்து மண், நீர் மற்றும் தாவர மாதிரிகளை சேகரித்து, ஆய்வு செய்து பின்பிற்ற வேண்டிய தீர்வு ஆலோசனைகளையும் வழங்கப்படுகின்றன.
  • நேரில். தொலைபேசி, கடிதங்கள், காணொலி மாநாடு, வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழந்கப்படுகின்றன.
  • கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்துதல் மற்றும் பங்கேற்றுதல்
  • பல்வேறு பண்ணைகளுக்குச் சென்று ஆலோசனை சேவைகள் வழந்கப்படுகின்றன.
  • புதிய பண்ணைகள் அமைப்பதற்கு வங்கிக் கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கைகள் தயாரித்து வழங்குதல்
  • கண்காட்சி நடத்துதல் மற்றும் பங்கேற்றுதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்களுக்கு இந்நிலையத்தில் விற்பனைக்குறியவை:

  • தீவனப் பயிர் விதைகள் (தீவனச் சோளம் கோ.எப்.எஸ். 29 மற்றும் 31, அகத்தி, வேலிமசால், முயல் மசால், சுபாபுல் வகைகள்)
  • மரம் மற்றும் பழச்செடிகள் (தென்னை, மா, பலா, கொய்யா, மாதுளை, நாவல், சாத்துக்குடி, எலுமிச்சை நவஉ.,)
  • கால்நடைகளுக்கான தானுவாஸ் ஸ்மார்ட் தாது உப்பு கலவை மற்றும் தாது கட்டி
  • கோழிக்குஞ்சுகள் (அசீல் இரகம், கிராமப்பிரியா, நந்தனம் மற்றும் கருங்கோழி) மற்றும் மீன் குஞ்சுகள்
  • மண்புழு உரம் மற்றும் அசோலா
  • மண் மற்றும் நீர் பரிசோதனை செய்யப்படுகின்றது.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம் - 630 206
தொலைபேசி: +91-4577-264288
மின்னஞ்சல்: kvk-kundrakudi@tanuvas.org.in | kvk.sivaganga@icar.gov.in