vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

மாணவர் மன்றங்கள்

பொருநை தமிழ் மன்றம்

“தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் . மாணவர்கள் தங்களின் கால்நடை அறிவியல் புலமையை மட்டுமின்றி தமிழிலும் சிறந்து விளங்க தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி என்றும் ஊன்றுகோலாய் அமையும். அதற்கு முன்னேற்பாடாக பொருநை தமிழ் மன்றம் 02.06.2022 அன்று முதல் தொடங்கி செயல்பட்டு வருகின்றது.

பொருநை தமிழ் மன்றம் - குறிக்கோள்

பின்வரும் பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்களின் தனித்திறனை வளர்த்தல்.

  • பட்டிமன்றம்
  • கவிதை திறனாய்வுகள்
  • புதினங்களின் பார்வை
  • கட்டுரைகள் மதிப்பீடு
  • கால்நடை கல்வியில் தமிழ்
  • வட்டார மொழியும் கால்நடை வளமும்
  • எழுத்து பயிற்சி
  • தமிழ்த் தொல்லியல் இடங்களை காணும் களப்பணி
  • புத்தக மதிப்புரை

தனித்துவமிக்க செயல்பாடுகள்

  • பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பாக நம் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற பேச்சு கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் மாணவர்களை ஆர்வத்துடன் கலந்து கொண்டு செயல்பட்டனர்.
  • 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு “இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
  • மாணவர்களிடையே மேலும் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்
  • ஆண்டுதோறும் நடைபெறும் முத்தமிழ் விழாவில் தளிர் 2022 மாணவர் இதழ் வெளியிடப்பட்டது.
  • “இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்” – பேச்சுப் போட்டி
  • “வீரமங்கை வேலு நாச்சியார்” – ஓவியப் போட்டி
  • பொருநை தமிழ் மன்றம் – தொடக்க விழா
  • பொருநை தமிழ் மன்றம் – தளிர் 2022 மாணவர் இதழ் வெளியீடு

வனவிலங்கு சங்கம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. நமது கால்நடை மருத்துவக்கல்லூரி, இது வன விலங்குகள் பற்றி படிக்கவும் தெரிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் உகந்த இடமாகத் திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் பலதரப்பட்ட காடு வகைகள் உள்ளன.
மேலும் இந்த மாவட்டத்தில் ஆறுகள், பாய்ந்து வனவிலங்குகள் வாழ ஏதுவான இடமாக திகழ்கிறது. மேலும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை வனவிலங்கு சரணாலயம் பலதரப்பட்ட தாவரங்களையும் வன விலங்குகளையும் கொண்டுள்ளது. தேனி மாவட்டம் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு விலங்குகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஏதுவான ஒரு மாவட்டமாக திகழ்கிறது.

இந்த வனவிலங்கு சங்கத்தின் பணிகளாவன

  • தொடர்பான சந்திப்புகள் சந்திப்புகள்
  • வனவிலங்கு பாதுகாப்பு
  • தர்க்கம் மற்றும் உரையாடல்கள்
  • சரணாலயங்களுக்கு சுற்றுலா
  • வனவிலங்குகளை அடையாளம் காணுதல்
  • வனவிலங்கு கணக்கெடுப்பு
  • ஆவணப்படங்களை காணுதல்
  • வனத்துறையோடு சேர்ந்து நோய் கண்டறிதல், இறப்பறி பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ளுதல்
  • பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • வனவிலங்கு புகைப்படம் எடுத்தல் ஆகியன

சிலம்பன் வனவிலங்கு சங்கம்

06.05.2022 அன்று முனைவர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன்,முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேனி, அவர்கள் சிலம்பன் வனவிலங்கு சங்கத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வனவிலங்கு சங்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரண்டாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆகிய இரு நாட்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 07.05.2022 அன்று இறகுகள் அமிர்தா இயற்கை அமைப்பின் நிறுவனர் மற்றும் பிரபல வனவிலங்கு புகைப்பட கலைஞரும் இயற்கை ஆர்வலருமான திரு.ரவீந்திரன் நடராஜன் அவர்கள் வனவிலங்கு புகைப்படம் எடுப்பதில் நெறிமுறைகள் மற்றும் பறவைகளைப் பார்க்கும் அடிப்படைகள் என்ற தலைப்புகளில் விரிவாக எடுத்துரைத்தார். 08.05.2022 அன்று அடுக்கம் மற்றும் கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள வனப் பகுதிகளில், வனத் துறையினருடன் இணைந்து இயற்கை நடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.